தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மாஸ் நடிகராக உயர்ந்தவர் தான் நடிகர் சிம்பு.
இவர் தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் "பத்துதல" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை பிரியா பவானி சங்கர் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்
வெற்றி இயக்குனர்
இந்நிலையில் நடிகர் சிம்புவின் அடுத்த படமான தனது 48வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.
இயக்குனர் தேசிங் பெரியசாமி இதற்கு முன்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் நடுவில் நல்ல வரவேற்பு பெற்றது
தற்போது சிம்பு தேசிங் பெரியசாமி கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

.jpg)
0 கருத்துகள்
Please No Spam Comment's