பாக்கியலட்சுமி
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தற்போது ராதிகாவிடமும் மற்றவர்களிடமும் சிக்கிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துகொண்டுஇருக்கிறார். இன்றைய எபிசோடில் ராதிகா அவரிடம் வந்து ஒரு கேள்வியை கேட்கிறார்.
"இனியா என்னை மதிப்பதே இல்லை, என்னை அவள் மதிக்க வேண்டும். உங்க அப்பாவும், அம்மாவும் என்னை எப்போது என்னை மட்டும் மருமகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் . அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என கண்டிஷனாக சொல்லிவிட்டு போகிறார்.
அதன் பின் கோபி இதை எல்லாம் நினைத்து குடித்துவிட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்குகிறார்.
பாக்யாவுக்கு இரண்டாம் கல்யாணம்: எழில்
மறுநாள் கோபி ரோட்டில் எழிலை சந்தித்து பேசுகிறார். அப்போது பாக்கியலட்சுமி பழனிசாமி உடன் பழகுவது பற்றி கேட்கிறார் கோபி. "பாக்யாவிடம் அவர் வழிந்து வழிந்து பேசுகிறார், அதை எல்லாம் நீ கேட்க மாட்டியா" என கோபி கேட்க, எழில் கோபமாக 'நீங்க செய்தது போல அவர் துரோகம் செய்யவில்லை' என கோபமாக கூறுகிறார் எழில் .


0 கருத்துகள்
Please No Spam Comment's